நவ.16 ல் சபரிமலை நடை திறப்பு - சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
நவ.16 ல் சபரிமலை நடை திறப்பு - சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு
x
சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி முதல் மண்டல  மற்றும் மகர விளக்கு பூஜைகள் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது, தினமும் 1,000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். மண்டல பூஜையான டிசம்பர் 26, மகர விளக்கு பூஜையான ஜனவரி14ல் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வாசு தெரிவித்துள்ளார். தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் தொற்று இல்லை என்ற எதிர்மறை சான்றிதழ்கள் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்