17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - 22 நாட்களாக பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை

ஒடிசாவில் 17 வயது சிறுமியை கடத்தி 22 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - 22 நாட்களாக பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை
x
ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி, பெற்றோரிடம் கோபம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் தனது கிராமத்திலிருந்து கட்டாக்கிற்கு பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் மனம் மாறி மீண்டும் வீட்டுக்கு திறம்ப பேருந்துக்குள் காத்திருந்துள்ளார். 
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர், சிறுமியை அவளது கிராமத்தில் விட்டுவிடுவதாக ஏற்றி சென்றுள்ளார். நம்பிக்கையுடன் ஏறிய சிறுமியை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு  22 நாட்களாக அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பண்ணை வீட்டு நிகழ்வுகளில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள், வந்து சோதனையிட்ட போது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், விசாரணை தொடங்கினர். இவ்விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்