காதலை ஏற்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றிக்கொலை : பணிபுரிந்த இடத்திற்கே சென்று பெண்ணை எரித்த நபர்

காதலை ஏற்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் ஆந்திராவில் அரங்கேறி இருக்கிறது.
காதலை ஏற்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றிக்கொலை : பணிபுரிந்த இடத்திற்கே சென்று பெண்ணை எரித்த நபர்
x
காதலை ஏற்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் ஆந்திராவில் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணியை இப்போது பார்க்கலாம்... 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சித்தன்ன பேட்டையை சேர்ந்த இளம்பெண் சின்னாரி. செவிலியரான இவர், விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவரை நாகபூஷணம் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சின்னாரி இவரின் காதலை ஏற்க மறுத்த போதிலும், நாகபூஷணம் அவரை விடுவதாக இல்லை. தினம் தினம் அவர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்து போய் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்திற்கு மேல் நாகபூஷணத்தின் தொல்லையை பொறுக்க முடியாத அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாருக்கும் நாகபூஷணத்தை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சின்னாரி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து பிரச்சினை செய்துள்ளார். 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே திடீரென தான் மறைத்து வைத்திருந்த  பெட்ரோலை எடுத்து சின்னாரி மீது ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உடல் கருகி அந்த பெண் உயிரிழந்தார். உடலில் தீப்பற்றிய படி அங்கும் இங்கும் அவர் ஓடி கடைசியில் அடங்கிப் போனார் அந்த இளம்பெண். இந்த சம்பவத்தின் போது  நாகபூஷணத்துக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 

80 சதவீத காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாகபூஷணம். காதலிக்க மறுத்ததற்காக பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்