ஹத்ராஸ் இளம்பெண் வழக்கை விசாரிக்கும் சிபிஐ : பெண் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 19 வயதான இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள், இளம்பெண் எரிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெண்ணின் தாயையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற அவர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story