"கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலையில் மாற்றம்" - பிரதமர் மோடி பெருமிதம்

விவசாயிகளுக்கு ஏற்படும் சின்னச்சின்ன செலவுகளுக்காக கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலை, கிசான் திட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலையில் மாற்றம் - பிரதமர் மோடி பெருமிதம்
x
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலா சாஹேப் விக்கே பாட்டீலின் சுய சரிதையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,  பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம்  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்  வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  விவசாயிகளை விவசாயி என்ற நிலையிலிருந்து சுய தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு தேவையான வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தொடர்ச்சியாக இந்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார். குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகள் சந்திக்கக் கூடிய சின்னச் சின்ன பிரச்சினைகளையும் களைய தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்