காதலனை சந்திக்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் - வினையில் முடிந்த பேஸ்புக் காதல்

பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞருடன் காதல்... யார் என தெரியாத இளைஞருடன் பயணம் என்றிருந்த 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
காதலனை சந்திக்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் - வினையில் முடிந்த பேஸ்புக் காதல்
x
பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞருடன் காதல்... யார் என தெரியாத இளைஞருடன் பயணம் என்றிருந்த 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கும் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார் ஒரு இளைஞர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பேரிகை என்ற கிராமத்தை சேர்ந்த தரணி என்ற இளைஞருடன் சிறுமிக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் பல மணி நேரமாக போனில் பேசி வந்த நிலையில் நேரில் சந்திக்க திட்டம் தீட்டியிருக்கின்றனர். 

இந்த சூழலில் தான் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கே இருந்த விபின்ராஜ் என்ற இளைஞரை பார்த்த சிறுமி, அவரிடம் தன் காதலனை பற்றி கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஒசூருக்கு செல்ல இருப்பதாக சிறுமி கூறவே, தான் உதவி செய்கிறேன் என முன்வந்துள்ளார் விபின்ராஜ்.

ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை நம்பி கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார் அந்த சிறுமி. தான் வருவதை தன் காதலனுக்கும் தெரிவித்துள்ளார். விபின்ராஜ் தன் நண்பர்களான அஜித்ராஜ், ஜோபியன் ஆகிய 2 பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். 

செல்லும் வழியில் காரை நிறுத்திய அந்த கும்பல், சிறுமியை காருக்குள்ளேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. செய்வதறியாக திகைத்த சிறுமியை, ஒசூர் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு கிளம்பியிருக்கிறது அந்த கும்பல்... பின்னர் தன் காதலனுக்கு போன் செய்துள்ளார் அந்த சிறுமி. 

பின்னர் காதலன் தரணி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே தன் மகளை காணாமல் பரிதவித்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது சிறுமியின் செல்போன் ஒசூர் அருகே இருப்பதை கண்டறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர். 

மேலும் காதலன் தரணியையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு நடந்த அத்தனை கொடூரங்களும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த விபின்ராஜ், அஜித்ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அறியாத வயதில் வந்த காதலும், செல்போனும், அறியாமையும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை சீரழித்திருப்பது சோகத்தின் உச்சம்... 


Next Story

மேலும் செய்திகள்