திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் - ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 16ஆம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவம் பக்தர்களுடனும் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று காலை 11 மணியளவில் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Next Story