முன்னாள் சிபிஐ இயக்குநர் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு - இமாச்சலப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை
சிம்லாவில் சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வினி குமார், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிம்லாவில் சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வினி குமார், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 1973-ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அவர், 2008 முதல் 2010 வரையில் சிபிஐ இயக்குநராக பணியாற்றியவர். சிம்லாவில் அவருடைய வீட்டில், இமாச்சல பிரதேச மாநில போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story