பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்த விவகாரம் - மன்னிப்பு கோரிய நொய்டா போலீஸ்

ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்திக்க சென்றபோது நொய்டா போலீசார் அனுமதி மறுத்தனர்.
பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்த விவகாரம் - மன்னிப்பு கோரிய நொய்டா போலீஸ்
x
ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்திக்க சென்றபோது நொய்டா போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு நொய்டா போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நொய்டா போலீசார் உறுதி அளித்துள்ளனர். 

கடத்தல்காரர்கள், போலீஸ் இடையே மோதல் : போலீஸ் என்கவுன்ட்டரில் 2 பேர் காயம் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கடத்தல்காரர்கள் போலீஸ் இடையே நடந்த என்கவுன்ட்டரில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், ஹாசிஷ் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, மூளையாக செயல்படுபவர்கள் யார் என்பது குறித்து, பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 



Next Story

மேலும் செய்திகள்