"நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?"

நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?
x
போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இவர்களின் வங்கி பரிவர்த்தனைகளும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே தீபிகா படுகோன், அவரின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மால், ஹாஷ், Weed  என அவர்கள் வாட்ஸ் அப்பில் பேசியது சிகரெட்டுகளின் தரம் பற்றி தான் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இவர்களுக்கு போதைப் பொருள் புழக்கத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என விசாரணை நடத்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்