குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா
x
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவிற்கு கொரோனா இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளது.

குடியரசு துணை தலைவர் நலம் பெற பிரார்த்தனை- முதலமைச்சர் 



குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, கொரோனா தொற்றில் இருந்து நலம்பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொற்றுக் காரணமாக வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடியரசு துணை தலைவர், உடல் ஆரோக்கியத்தோடு இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டிகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

"வெங்கையா நாயுடு பூரண நலம் பெற பிரார்த்தனை" - துணை முதல்வர் ஓபிஎஸ் டுவிட்டரில் பதிவு



துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தொற்றில் இருந்து பூரண நலமடைய விரும்புவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், வெங்கையா நாயுடு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதை அறிந்ததாகவும், மன உறுதியுடன் இந்தக் காலக் கட்டத்தை அவர் கடக்க பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்