புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 9 ஆம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது .
புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி
x
வழக்கமாக கோயில் இடதுபுறம் உள்ள தெப்பக் குளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது.  
கோயில் வளாகத்தில் இருக்கும் அயன மண்டபத்தில் இருந்து,  ஸ்ரீதேவி , பூதேவி சமேத மலையப்ப சுவாமி  சக்கரத்தாழ்வாராக எழுந்தருளிய நிலையில், பால், தேன், தயிர் , மஞ்சள் குங்குமம்  ஆகியவை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.இதனைத்  தொடர்ந்து, கோயில் வளாகத்துக்குள் ஏற்பாடு செய்து இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. திருப்பதி பிரம்மோற்சவம் இம்மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், மாலை நடக்கும் கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. அக்டோபர் 16  முதல் 24-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்