முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று காலை மாரடைப்பால் காலமானார். நாட்டை முன்னேற்றுவதில் விடாமுயற்சி உடன் பாடுபட்டவர் ஜவ்வந்த் சிங் என பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். ராணுவ வீரராக வாழ்க்கையை தொடங்கிய ஜஸ்வந்த் சிங், பின்னர் அரசியலில் நுழைந்து, பல துறைகளை வெற்றிக்கரமாக கையாண்டவர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதே போன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story