கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 11 ஆம் தேதி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த அவர் பாஜகவின், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்