டாட்டூ கட்டணம் தொடர்பாக தகராறு - சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் டாட்டூ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அழகு நிலைய உரிமையாளரை தாக்கியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
x
புதுச்சேரி காமராஜர் நகர் சாலையில்  சரவணன் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாட்டூ 
வரைய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதற்கான கட்டணம் தொடர்பாக 
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல், உரிமையாளர் சரவணன் மற்றும் ஊழியர்களை மறைத்து வைத்திருந்த ஆயதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த  மூர்த்தி என்ற ஊழியர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அழகு நிலைய உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்