தமிழகத்தில் ரயில்பாதை பணிகள் நிறுத்திவைப்பு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற மக்களவையில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது என்றும், புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியத்திற்கான செலவினை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்