வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
x
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும்,  எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்