வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story