தாயை அடித்துக் கொன்ற 13 மற்றும் 15 வயது சிறுவர்கள் - வாக்குவாதம் முற்றிய நிலையில் இரும்பு தடியால் அடித்த விபரீதம்

ஒடிஷாவில் பெற்ற தாயையே இரண்டு சிறுவர்கள் கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயை அடித்துக் கொன்ற 13 மற்றும் 15 வயது சிறுவர்கள் - வாக்குவாதம் முற்றிய நிலையில் இரும்பு தடியால் அடித்த விபரீதம்
x
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தரபடா பகுதியை சேர்ந்த பினோதினி மிஸ்ரா என்ற 40 வயது பெண், தனது 13 மற்றும் 15 வயது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் மூவரும் இருந்தபோது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, மூவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் இருவரும் இரும்பு தடியால், தாய் பினோதினியை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், படுகாயமடைந்த பினோதினி உயிரிழந்து விட்டார். இதையடுத்து, சிறுவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்