வாகன சோதனையில் ரூ.3.75 கோடி பறிமுதல் - குஜராத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஹைதராபாத்தில் இருந்து குஜராத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனையில் ரூ.3.75 கோடி பறிமுதல் - குஜராத்தை சேர்ந்த 4 பேர் கைது
x
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் 2 வாகனங்களில் கொண்டு செல்லப்படட 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பயணித்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்