நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இரு அவைகளிலும் எடுத்துக்கொள்ளப்பட இருக்கும், அலுவலர்கள் குறித்த பட்டியலை அலுவல் ஆய்வு குழு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது
x
அதில், காலை 9 மணிக்கு மக்களவை கூடியதும் மறைந்த உறுப்பினர்கள் பிரணாப்முகர்ஜி, வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 2020-21 ம் நிதியாண்டிற்கு தேவையான துணை மானிய கோரிக்கை மீதான அறிக்கை மற்றும் தீர்மானத்தை நிதித்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் முன்மொழிகிறார். நாட்டில் நிலவும் சூழல் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கைகளை அவையில்  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வாசிக்கிறார். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் திருத்த சட்டத்தையும் அவையில் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிமுகப்படுத்துகிறார். குறைந்த செலவில் ஹோமியோபதி மருத்துவம் கிடைக்க வழிவகை செய்யும் ஹோமியோபதி மருத்துவ ஆணைய மசோதா பரிசீலனை மற்றும் விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்