காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் மாற்றம் - தலைவருக்கு உதவ 6 பேர் கொண்ட குழு அமைப்பு

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் மாற்றம் - தலைவருக்கு உதவ 6 பேர் கொண்ட குழு அமைப்பு
x
கட்சியின் தலைவருக்கு உதவும் வகையில் 6 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏ.கே. அந்தோணி, அகமது படேல், கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜூவாலா ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  பொதுச் செயலாளர்களாக இருந்த குலாம் நபி ஆசாத், மோதிலால் ஓரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். 

தமிழக மேலிட பார்வையாளராக நியமித்துள்ள தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி மற்றும் கோவா பொறுப்பாளராகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. மாணிக்கம் தாகூர், தெலங்கானாவுக்கும், செல்லக்குமார் ஒடிஷாவுக்கும் மேலிடப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்