கேரள முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கேரள முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்
x
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை, கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதை தொடர்ந்து, பினராயி விஜயனுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்