அந்தமான் நிக்கோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
அந்தமான் நிக்கோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணிக்கு சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை  காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்த இணைப்பு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள் சுமார் ஆயிரத்து 224 கோடி ரூபாய் செலவில் சுமார் 2300 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் தீவின் சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்