இறக்குமதியை தடை செய்யும் முன் உற்பத்தி செய்ய வேண்டும் - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சாடல்
தேவையான பொருட்களை உருவாக்கிவிட்டு அதன்பிறகு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்களை உருவாக்கிவிட்டு அதன்பிறகு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு நாள் ஞாயிற்று கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், இறக்குமதி தடை குறித்து பேசியது, அவரது அலுவலக அதிகாரிகளுக்கு மட்டுமே பயன்படும் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே இறக்குமதி செய்பவர் பாதுகாப்பு அமைச்சகம் என்றும், எந்தவொரு இறக்குமதி தடையும் உண்மையில் ஒரு தடைதான் என்றும் பாதுகாப்பு அமைச்சர் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
Next Story