கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு அஞ்சலி

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
x
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம், துபாயிலிருந்து இந்தியர்களை மீட்டு அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானதில், விமானி தீபக் சாத்தே உயிரிழந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா நிறுவன விமானிகள், ஊழியர்கள், மற்றும் நண்பர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். விங் கமாண்டராக இருந்து ஓய்வுபெற்ற தீபக் சாத்தே, பயணிகள் பலரது உயிரைக் காப்பாற்றி நாட்டிற்காக தனது உயிரை தீயாகம் செய்திருப்பதாக பலரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்