"கேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு கிடைக்கும்"
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின், பல்வேறு காப்பீடு திட்டங்கள் உள்ளதால், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆய்வு அறிக்கை அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. விமானப் பயணச் சீட்டு பெறும்போது பயண காப்பீடு வழங்கப்படுவதுடன், கிரெடிட் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டிருப்பதால் இழப்பீடு தொகை கிடைக்கும். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 75 லட்சம் முதல் அதற்குமேல் இழப்பீடு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே மங்களூரு விமான விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், கோழிக்கோடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story