கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூச்சுத்திணறல் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்
x
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மருத்துவமனை முழுவதும் தீப்பற்ற ஆரம்பித்தது. இதனால் உள்ளே சிகிச்சை பெற்று வந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலறல் சத்தத்துடன் வெளியேறினர். இதில் மூச்சுத்திணறல் காரணமாக தற்போது 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  40க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ​விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்