நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம்போர்டு வேண்டுகோள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரி வழிபாட்டுக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு  - பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம்போர்டு வேண்டுகோள்
x
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரி வழிபாட்டுக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளது.  ஆடி மாதத்தில் நடைபெறும் நிறை புத்தரி வழிபாட்டில்தே வசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளையும் பயிர்கள், நெற்கதிர்களை கொண்டும் தமிழக பக்தர்களின் காணிக்கையை கொண்டும் ஐயப்பனுக்கு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் நாளை நடைபெறும் வழிபாட்டுக்காக, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம்  காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நிறைபுத்தரி வழிபாட்டுக்காக கேரளா மற்றும் தமிழக பக்தர்கள் நெற்கதிர்கள் கொண்டு வர வேண்டாம் எனவும் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்