உயிரிழந்த விமானி சாதே, விமான படை முன்னாள் பைலட் - 22 ஆண்டுகள் போர் விமானங்களை இயக்கியவர்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, விமானப் படையில் 22 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியுள்ளார்.
உயிரிழந்த விமானி சாதே, விமான படை முன்னாள் பைலட் - 22 ஆண்டுகள் போர் விமானங்களை இயக்கியவர்
x
மும்பையை சேர்ந்த சாதே, 1981ஆம் ஆண்டு, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து, சிறந்த வீரருக்கான Sword of Honour என்ற தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் இந்திய விமானப்படையில், விமானியாக சேர்ந்த சாதே, போர் விமானங்களை இயக்கி வந்துள்ளார். விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில், 2003 வரை, 22 ஆண்டுகள் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2003ஆம் ஆண்டு விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற சாதே,  ஏர் இந்தியாவில் சேர்ந்து, பயணிகள் விமான விமானியாக பணியாற்றி வந்தார். முதலில், ஏர் பஸ் 310-ரக பெரிய விமானங்களை இயக்கி வந்த சாதே, பின்னர் போயிங் 737 ரக விமானங்களை இயக்கி வந்தார். சாதே, மிகுந்த தொழில் நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்தவர் என்று சக விமானிகளும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்