இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு
x
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, இடுக்கி ராஜ மலையில் கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது. மூன்றரை கிலோமீட்டர் உயரத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டதால், அங்கு வீடுகள் அமைத்து தங்கியிருந்த தமிழக தோட்டத் தொழிலாளர்கள்,  80க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கினர். 
மலைப்பிரதேசம் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அடைந்த மீட்புக்குழுவினர், காயங்களுடன் 12 பேரை உயிருடன் மீட்டனர். 17 பேரது சடலங்களையும் மீட்டனர்.  மாயமான சுமார் 50 பேர் மண்சரிவில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுவதால் அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்