கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்பு - 5 பேர் பலி

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.
x
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, இடுக்கி ராஜ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருந்த 10 பேர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். தமிழக தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இந்த பகுதியில் 80க்கும் மேற்பட்டோர் வசித்து வந்த நிலையில், மண்சரிவில் 20 பேர் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மண்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப்பிரதேசம் என்பதால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்