"புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை" - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
x
புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு  4 மாதமாக இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை என்றும், இதனால்  புதுச்சேரி அரசுக்கு இம்மாதம்  40 சதவீத வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 560 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி மத்திய நிதியமைச்சர் 
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 2 ஆயிரம்  படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்