ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் கிருமிநாசினி குடித்த 3 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் சானிடைசரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் கிருமிநாசினி குடித்த 3 பேர் உயிரிழப்பு
x
ஆந்திராவில் மதுக்கடைகள் குறைப்பாலும், விலை உயர்வாலும் மதுப்பிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கடப்பா மாவட்டம் பென்ட்லிமரியில், பத்துக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் மதுவுக்கு பதில் கிருமிநாசினியை குடித்துள்ளனர். இதில் கடும் வயிற்று வலி ஏற்பட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் கடப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்