மதுபானம் விலை உயர்வின் எதிரொலி - போதைக்காக சானிடைசர் குடிக்கும் விபரீதம்

ஆந்திர மாநிலத்தில் போதைக்காக சானிடைசர் குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுபானம் விலை உயர்வின் எதிரொலி - போதைக்காக சானிடைசர் குடிக்கும் விபரீதம்
x
ஆந்திர மாநிலத்தில் 50 சதவிகித மதுக்கடைகள் திறந்து, மது விலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் அதிக அளவில் சாராயம் காய்ச்சி விற்கப்படுகின்றது. இதை வாங்க முடியாமல் தவிக்கும் மது பிரியர்கள்,  கிருமி நாசினி மருந்தை உட்கொண்டு உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, பிரகாசம் மாவட்டத்தில் 15 பேர் இறந்நிலையில், கடப்பா மாவட்டத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சானிடைசர் குடிக்கம் வீடியோ தற்போது, வெளியாகி உள்ளது. அவர்களின் நிலையும் கவலைக்கிடம் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர் பலியை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்