ராமர் பூஜைக்கு அனுப்பி வைக்கப்படும் புனித நீர், மண் - அயோத்தி சென்றடைந்தது ரங்கநாதசுவாமி கோயிலின் புனித மண்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் புனித மண் மற்றும் புனித நீர் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ராமர் பூஜைக்கு அனுப்பி வைக்கப்படும் புனித நீர், மண் - அயோத்தி சென்றடைந்தது ரங்கநாதசுவாமி கோயிலின் புனித மண்
x
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்தும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் புனித மண் மற்றும் புனித நீர் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி, நேற்று பத்ரிநாத் கோவிலில் இருந்தும், திருச்சி ஸ்ரீரங்க நாத சுவாமி கோயிலில் இருந்தும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன்  மஹாகலேஷ்வர் கோயிலில் இருந்தும் புனித நீர் மற்றும் மண் அயோத்தி சென்றடைந்தது. சுதந்திர போராட்ட வீரர்களான ஹூட்டத்மா சந்திரசேகர் ஆசாத் மற்றும் ஸ்ரீ பிர்சா முண்டா பிறந்த இடங்களில் இருந்தும் புனித மண் அயோத்தி சென்றடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்