கேரளாவில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி - ரயில் பெட்டிக்கு சீல் வைப்பு
கேரளாவில் ரயிலில் பயணித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரயில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
கன்னியாகுமாரியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் மனைவியின் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் செல்ல நேரிட்டது. கண்ணூர்-திருவனந்தபுரம் ஜனஷதாபி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவரை தொடர்பு கொண்ட, சுகாதார அதிகாரிகள் , பரிசோதனை முடிவுகளை தெரிவித்துள்ளனர். ரயில் பயணிப்பதாக அவர் கூறியதை அடுத்து , எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். அங்கிருந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை கலாமசேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் பயணித்த ரயில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
Next Story