புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு - இ பாஸ் கட்டாயம்
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஆகஸ்ட் 31 வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஆகஸ்ட் 31 வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 3ஆம் கட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குள் வருபவர்களும், புதுச்சேரியில் இருந்து வெளியே செல்பவர்களும் கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இல்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Next Story