ஓரினச் சேர்க்கையால் மனைவியை தவிர்த்த இளைஞன் - புதுமாப்பிள்ளை மீது காவல்நிலையத்தில் புகார் - வழக்குப்பதிவு

இளைஞரின் ஓரினச் சேர்க்கை உறவு முறை தெரியாமல் நடந்த திருமணத்தால் இளம்பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
ஓரினச் சேர்க்கையால் மனைவியை தவிர்த்த இளைஞன் - புதுமாப்பிள்ளை மீது காவல்நிலையத்தில் புகார் - வழக்குப்பதிவு
x
ஆந்திர  மாநிலம் குண்டூர்  மாவட்டத்தைச்  சேர்ந்த 30 வயதான இளைஞர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். 
இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்த மகனுக்கு அவருடைய பெற்றோர் பெண் பார்த்தனர். ஊரடங்கு நேரத்தில் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்
25 வயது இளம்பெண் ஒருவருடன் திருமணமும் நடந்துள்ளது. அப்போது பெண் வீட்டார் 50 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், 70 சவரன் நகை என ஆடம்பரமாக மகள் திருமணத்தை நடத்தி முடித்தனர்.பல்வேறு கனவுகளுடன் தன் வாழ்க்கையை துவங்க திட்டமிட்டு இருந்தார் அந்த இளம்பெண். ஆனால், முதலிரவு அன்று மனைவியை நெருங்காமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி தவிர்த்துள்ளார் அந்த அமெரிக்க மாப்பிள்ளை.
ஆனாலும் கூட கணவரின் நிலையை அறிந்து எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார் அந்த பெண். அடுத்தடுத்த இரவுகளிலும், அடுக்கடுக்காய்
கதை சொல்லி வந்த மாப்பிள்ளை மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
புதுமாப்பிள்ளைக்கு என்னதான் பிரச்சினை என்று புரியாமல் குழம்பித் தவித்த அந்த இளம்பெண், கடைசியில் தன் தோழிகளிடம் சொல்லவே அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயம் பெண்ணின் பெற்றோரின் கவனத்திற்கு சென்றது. அமெரிக்க மாப்பிள்ளையுடன் மகளுக்கு வாழ்க்கை என்ற மகிழ்ச்சியில் இருந்த அவர்களுக்கு பேரிடியாய் வந்து சேர்ந்தது அந்த செய்தி. அமெரிக்க மாப்பிள்ளையை கூப்பிட்டு விசாரித்ததில்,
ஆரம்பத்தில் மழுப்பிய அவர், ஒருகட்டத்தில், உண்மையை ஒப்புக் கொண்டார். அமெரிக்காவில் வசித்து வந்த அவருக்கு அங்குள்ள இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது ஓரினச்சேர்க்கையாக மாறியுள்ளது. அங்கு இருவரும் மனமொத்து வாழ்க்கை நடத்தி வருவதாகவும், தனக்கு பெண்ணுடன் நடந்த திருமணத்தில் ஆர்வம் இல்லை என கூறியதை கேட்டு இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். ஏமாற்றி திருமணம் செய்து  கொண்டதாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில்  இளைஞரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அமெரிக்க மாப்பிள்ளை மோகம்.. அவசர கதியிலான திருமணம்… இதெல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது.

Next Story

மேலும் செய்திகள்