16 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - வளர்ப்பு தந்தையை கைது செய்த போலீசார்

புதுச்சேரியில் வளர்ப்பு மகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அந்தரங்க இடங்களில் இரும்பு கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - வளர்ப்பு தந்தையை கைது செய்த போலீசார்
x
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் 16 வயது சிறுமி. உடலின் அந்தரங்க இடங்களில் பலத்த காயங்கள் இருந்ததால் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது தான் சிறுமிக்கு நடந்த அந்த பயங்கரம் வெளியே தெரிந்தது. கணவனை இழந்த நிலையில் சிறுமியின் தாய், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டட தொழில் செய்யும் ஒருவரை திருமணம் செய்துள்ளார். 

இவர்களுக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்த நிலையில் முதல் கணவருக்கு பிறந்த மகள் என 4 பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார் அந்த பெண். இதனிடையே முதல் கணவருக்கு பிறந்த சிறுமிக்கு வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த அவர், சொல்லவே கூசும் அளவுக்கு சித்ரவதைகளையும் செய்து வந்துள்ளார். தாயிடம் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியே சிறுமியை சீரழித்து வந்துள்ளார் அந்த கொடூர தந்தை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீண்டும் பலவந்தப்படுத்தி அழைத்து வந்து தன்  வேலையை காட்டியுள்ளார் அவர். அதுமட்டுமின்றி தனக்கு பிறந்த 3 பெண்களையும் கட்டி வைத்து அடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ந்து போன மூத்த பெண், தன் வளர்ப்பு தந்தையை தட்டிக் கேட்கவே, பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் சூடு வைத்தும், கையை உடைத்தும் தன் கோர முகத்தை காட்டியிருக்கிறார். வீட்டில் மயங்கி கிடந்த சிறுமியை மீட்ட தாய், பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்தபிறகு தான் இந்த கொடூரங்கள் அனைத்தும் தெரியவந்தது. இதையடுத்து கொடூரமான அந்த தந்தை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்