வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
x
வருங்காலத்திற்கான இலக்கு மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் கடன், தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதித் துறையின் விவேகமான நடைமுறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றும் இந்த கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்