ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை

பிரான்சில் இருந்து இந்தியா புறப்பட்ட ரபேல் போர் விமானங்கள் இன்று அரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்துக்கு வந்து சேருகின்றன.
ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை
x
பிரான்சில் இருந்து, திங்களன்று இந்தியா புறப்பட்ட ரபேல் போர் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தரை இறக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 11 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து விமானங்கள் புறப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு வரும் 5 ரபேல் விமானங்களை வரவேற்பதற்காக, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அம்பாலாவுக்கு செல்கிறார். இதற்கிடையே, விமானங்கள் தரை இறங்கும் விமான தளத்தை சுற்றியுள்ள துல்கோட், பல்தேவ் நகர், கர்னாலா மற்றும் பஞ்சோகாரா பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிரோன் போன்ற எதுவும் பறக்கக் கூடாது எனவும் வீட்டு மாடிகளில் நின்றபடி புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் கடும் கட்டுப்பாடுகளை அம்பாலா காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்