ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை
பிரான்சில் இருந்து இந்தியா புறப்பட்ட ரபேல் போர் விமானங்கள் இன்று அரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்துக்கு வந்து சேருகின்றன.
பிரான்சில் இருந்து, திங்களன்று இந்தியா புறப்பட்ட ரபேல் போர் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தரை இறக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 11 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து விமானங்கள் புறப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு வரும் 5 ரபேல் விமானங்களை வரவேற்பதற்காக, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அம்பாலாவுக்கு செல்கிறார். இதற்கிடையே, விமானங்கள் தரை இறங்கும் விமான தளத்தை சுற்றியுள்ள துல்கோட், பல்தேவ் நகர், கர்னாலா மற்றும் பஞ்சோகாரா பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிரோன் போன்ற எதுவும் பறக்கக் கூடாது எனவும் வீட்டு மாடிகளில் நின்றபடி புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் கடும் கட்டுப்பாடுகளை அம்பாலா காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story