கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்: 13 மணி நேரமாக எடுத்து செல்லப்படாத உடல் - வீடியோ எடுத்து, ஆட்சியருக்கு அனுப்பிய நோயாளிகள்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த, பெண்ணின் உடலை 13 மணி நேரமாக ஊழியர்கள் எடுத்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்: 13 மணி நேரமாக எடுத்து செல்லப்படாத உடல் - வீடியோ எடுத்து, ஆட்சியருக்கு அனுப்பிய நோயாளிகள்
x
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த, பெண்ணின் உடலை 13 மணி நேரமாக ஊழியர்கள் எடுத்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா, வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 13 மணி நேரமாக மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் கண்டு கொள்ளாததால் அங்கு உள்ள நோயாளிகள் வீடியோ பதிவு செய்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த பயிற்சி ஆட்சியர் சூர்யா மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உடலை எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். இதனையடுத்து உடலை பிரேத கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்