"கொரோனாவில் மரணித்தோரின் இறுதிச் சடங்கை மறுக்கக்கூடாது" - குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை கண்ணியமான இறுதிச் சடங்குக்கு மறுப்பது வேதனையளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை கண்ணியமான இறுதிச் சடங்குக்கு மறுப்பது வேதனையளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணியமிக்க இறுதிச் சடங்குக்கு எதிரானவர்களை, சமுதாயமும், உள்ளூர் மக்களும் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூட நம்பிக்கை, தவறான செய்தி, வதந்தி போன்றவை குறித்து, சுகாதாரத் துறை மற்றும் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
Next Story