எல்லையில் வேகவேகமாக சாலை அமைத்து வரும் சீனா - எல்லையில் உள்ள கிராம மக்கள் அதிர்ச்சி தகவல்

இந்திய எல்லைக்கு அருகே சீனா வேக வேகமாக சாலை அமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லையில் வேகவேகமாக சாலை அமைத்து வரும் சீனா - எல்லையில் உள்ள கிராம மக்கள் அதிர்ச்சி தகவல்
x
இந்திய எல்லைக்கு அருகே சீனா வேக வேகமாக சாலை அமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் உள்ள சரங்க என்ற கிராமத்தில்,  எல்லையில், கடந்த சனிக்கிழமை முதல் சாலை அமைக்கும் பணியில், சீன ராணுவம் ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் ஆடு மேய்க்க போகும் போது சீனப்படையினர் வேகவேகமாக இந்த பணியில் ஈடுபட்டு வருவதை பார்த்ததாக, கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபரில் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், தற்போது அந்த பணியை, அவர்கள் விரைவு படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். பொதுமக்களின் இந்த புகார் குறித்து கண்காணித்து வருவதாக, கின்னூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்