கார்கில் வெற்றி தினம் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

கார்கில் வெற்றி தினமான இன்று, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
x
கார்கில் வெற்றி தினமான இன்று, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை போர் நடைபெற்றது. கார்கில் போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர். அந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் போர் நினைவு தினமான இன்று டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை வீரர்களும் மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்