வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேக்கம்

டெல்லி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழையால், தலைநகர் டெல்லியில் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.
வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேக்கம்
x
டெல்லி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழையால், தலைநகர் டெல்லியில் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், விடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெல்லியில் பல இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகள் நீர் நிரம்பி உள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. இதேபோல அண்டை மாநிலமான அரியானாவில் கனமழை பெய்து வருகிறது. ஒரு வாரத்திற்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், மானேசர், ஜெய்ப்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை 48-ல் நீர் தேங்கியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்