ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பனுக்கு கோவில் நடை ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது
சபரிமலை ஐயப்பனுக்கு கோவில் நடை ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் பட்டது. எனினும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதனால் சபரிமலை கோவில் பணியில் உள்ள தேவசம் போர்டு ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு நடை திறக்கப்பட்டது.
Next Story