தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கடந்த ஜூன் மாதம் முதல் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவலை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய செல்போன் அழைப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -
x
கேரள மாநில அரசியலை புரட்டிப் போட்டிருக்கும் தங்க கடத்தல் விவகாரம் இப்போது பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் கணவர் ஜெய்சங்கரும் கூட்டு சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் கைதாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனிடையே கடந்த 6ஆம் தேதி பிலிப்பைன்சில் இருந்து வந்த கப்பலில் முக கவசங்கள் வந்ததாகவும், அதன் மூலம் ஹவாலா பணம் கைமாறியதாகவும் கைதான ரெமீஸ் மீது புகார்கள் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்வப்னாவின் செல்போனை பெரிய ஆதாரமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஸ்வப்னா யார் யாரிடம் பேசினார் என்பதை தெரிந்து கொள்ள அவரின் செல்போன் அழைப்பு விபரங்களை வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கைதான சந்தீப் நாயரின் சகோதரர் ​ஸ்வரூப்புக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கும் சூழலில் அவரையும் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே முதலமைச்சர் பதவி விலகக்கோரி சட்டப்பேரவை வளாகத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 


"ஸ்வப்னாவுடன் சிவசங்கரனுக்கு நட்பு ரீதியாகவே பழக்கம்"- சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் 

தங்க கடத்தலில் கைதாகி இருக்கும் ஸ்வப்னா சுரேஷுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு நட்பு ரீதியான பழக்கமே இருந்ததாக சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்தததாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் மட்டுமே இருந்ததாகவும், அவர் மூலம் சந்தீப் நாயர், ஷரித் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிவசங்கரனிடம் விசாரணை நடத்தினால் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்பதால் விசாரணையை தீவிரப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்