கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் : அமைச்சர், அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சு
ஆந்திர மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நேரத்திற்கு உணவு, குடிநீர், மருந்து, மாத்திரைகள் வழங்குவதில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். செவிலியர்கள் அலட்சியம் செய்வதாக கூறி வீடியோ வெளியிட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆந்திர அமைச்சர் அணில் குமார் மருத்துவமனை அதிகாரிகளுடன் காணொலி மூலம் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர உத்தரவிட்டார்.
Next Story