"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து தொகுப்பு" : ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து தொகுப்பு : ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
x
கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை பெறுவதன் மூலமாக, நோயாளிகளும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும், விரைவில் குணம் அடைய வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த முடிவு எடுத்துள்ளார். மருத்துவத்தொகுப்பு சென்று சேர்வதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று, காணொளி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்